search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி
    X

    நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி

    • லாக்கரை உடைக்க முடியாததால் விபூதி குங்குமம் தூவி சென்றனர்
    • கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் அம்பாபுரம் ஜிபிஎம் தெருவில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது.

    நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் நிதி நிறுவனத்தை மூடிவிட்டு சென்றனர். நள்ளிரவில் நோட்டமிட்ட மர்ம நபர்கள் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    அங்குள்ள ஒரு பீரோவை உடைத்து அதனை திறந்தனர்.

    அதில் நகை பணம் எதுவும் இல்லை. மற்றொரு அறைக்கு சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த லாக்கரை உடைக்க முயற்சி செய்தனர். நீண்ட நேரம் போராடியும் அவர்களால் லாக்கரை உடைக்க முடியவில்லை. இதனால் கொள்ளையர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    மேலும் தங்களுடைய கைரேகை பதிவு ஆகாமல் இருக்க தாங்கள் கொண்டு வந்த விபூதி குங்குமம் ஆகியவற்றை அலுவலகம் முழுவதும் தூவி விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இன்று காலையில் நிதி நிறுவனத்தை திறக்க வந்த ஊழியர்கள் கொள்ளை முயற்சி நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து நிறுவன உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். நிதி நிறுவனத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    அதில் கொள்ளையர்கள் உருவம் பதிவு ஆகியிரு ப்பதாக கூறப்படுகிறது. இதனை வைத்து கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளையடிக்க வந்த இடத்தில் விபூதி குங்குமத்தை வீசி சென்ற சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×