search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
    X

    அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

    • கோடை விடுமுறை வழங்க வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் இன்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டம்

    போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் ஜூலி தலைமை தாங்கினார். தலைவர் மல்லிகா, மாநில செயற்குழு உறுப்பினர் தேவி, பொருளாளர் சரஸ்வதி உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.

    மாவட்டத் துணைச் செயலாளர் ரம்யா, துணைத் தலைவர் வேதவள்ளி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பரசுராமன், மாநில குழு உறுரப்பினர் எம்.பி. ராமச்சந்திரன், மாவட்டத் தலைவர் முரளி உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர்.

    கோடை காலமான மே மாதத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவது போன்று அங்கன்வாடி மையங்களுக்கும் மே மாதம் விடுமுறை வழங்கிட வேண்டும். அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்கிட வேண்டும்.

    அங்கன்வாடி ஊழியர்க ளுக்கு குறைந்தபட்சமாக மாதம் ரூ.26 ஆயிரம் ஊதியம் வழங்கிட வேண்டும். 10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி ஊழியர்க ளுக்கு நிபந்தனை இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    Next Story
    ×