search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல் அறுவடையின் போது மயக்கம் போட்டு விழுந்து கூலி தொழிலாளி சாவு
    X

    நெல் அறுவடையின் போது மயக்கம் போட்டு விழுந்து கூலி தொழிலாளி சாவு

    • 8 வயதிலேயே இருதய அறுவை சிகிச்சை செய்த சோகம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த ஓட்டேரிப்பாளையம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நெல் அறுவடை செய்வதற்காக அறுவடை எந்திரத்தை வரவ ழைத்தருந்தன.

    இதில் திருவண்ணாமலை மாவட்டம், மேல் பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் (வயது 23) என்பவர் நெல் அறுக்கும் எந்திரந்தை ஓட்டி வந்தார்.

    நெல் அறுவடை செய்து கொண்டிருக்கும் போது திடீரென தினேஷ் குமாருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

    இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையில் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தினேஷ் குமார் 8 வயதிலேயே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் தான் இறந்திருக்கலாம் என கூறுகின்றன.

    மேலும் இது சம்பந்தமாக தினேஷ் குமார் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்ப டையில் வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ேமலும் இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×