search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காளைகளை ஒரு சுற்றுக்கு மேல் ஓட விட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம்
    X

    காளைகளை ஒரு சுற்றுக்கு மேல் ஓட விட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம்

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை
    • வாடிவாசல் முதல் சேருமிடம் வரை ஓடும்பாதை அதிகபட்சமாக 100 மீட்டர் வரையே இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்

    வேலூர்:

    எருது விடும் விழாவில் காளைகளை ஒரு சுற்றுக்கு மேல் ஓடவிட்டால் காளையின் உரிமையாளருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று வேலூர் கலெக்டர் குமார வேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    வேலூர் மாவட்டத்தில் எருது விடும் விழா அரசாணையில் அனு மதிக்கப்பட்ட நாள், இடங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே நடத்தப்பட வேண்டும்.

    காளை ஓடும்பாதைவாடிவாசல் முதல் சேருமிடம் வரை நீளம் அதிகபட்சமாக 100 மீட்டர் வரையே இருக்க வேண்டும். காளைகள் ஓடு தளம் இலகுவாகவும், அகலமாகவும் இருக்க வேண்டும். கண்டிப்பாக இரட்டை தடுப்பான்கள் அமைக்கப்பட வேண்டும்.

    ஓடு தளத்தில் அதிகபட்சமாக 25 தன்னார்வலர்கள் மட்டுமே அவர்களுக்கென சிறப்பான முறையில் தயார் செய்யப்பட்ட உடைகளுடன் சுழற்சி முறையில் அனுமதிக் கப்பட வேண்டும்.

    பொதுமக்கள் யாரும் ஓடு தளத்துக்குள் செல்ல அனுமதியில்லை. காளைகள் சேருமிடம் விசாலமாக இருக்க வேண்டும்.

    வாடிவாசல், விழா அரங்கம் ஆகியவற்றை முழுமையாக கண்காணிக்க கண்காணிப்பு கேமரா அல்லது வெப் கேமரா வசதியை ஏற்படுத்த வேண்டும். விழா நடை பெறும் இடத்திலிருந்து 5 கி.மீ. சுற்றளவில் உள்ள கிணறுகளை விழாவுக்கு ஒரு நாள் முன்னதாக மூட வேண்டும்.

    ஒரு காளை ஒரு சுற்று மட்டுமே அனுமதிக்கப்படும். அடுத்த சுற் றுக்கு ஓடவிட்டால் காளையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் ரூ.5,000 அப ராதமும் விதிக்கப்படும்.

    விழா முடிந்ததும் காளைக ளுக்கு கட்டாயமாக போதிய ஓய்வு அளித்தும், மருத்துவ பரி சோதனை மேற்கொண்ட பிறகே கொண்டு செல்ல வேண்டும்.

    அரசு பிறப்பித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை விழாக் குழுவினரால் கடைப்பி டிக்கப்படுவது அரசு அலுவலர்க ளால் உறுதி செய்யப்பட்ட பிறகே, எருது விடும் விழாவுக்கு அனுமதி வழங்கப்படும்.

    விதிமுறைகளை மீறும்பட்சத் தில் எருது விடும் விழா நடத்த அனுமதிக்கப்பட மாட்டாது என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

    Next Story
    ×