என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    40 சதவீத தனியார் பள்ளிகள் மூடல்
    X

    40 சதவீத தனியார் பள்ளிகள் மூடல்

    • கள்ளக்குறிச்சி வன்முறை எதிரொலி
    • பள்ளி உரிமையாளர்கள் பாதுகாப்பு கேட்டு மனு

    வேலூர்:

    தமிழ்நாடு நர்சரி மெட்ரிக் சிபிஎஸ்இ பள்ளி அமைப்பு சார்பில் இன்று காலை மாநில அமைப்பு செயலாளர் தெய்வசிகாமணி தலைமையில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு போலீசார் தாக்கப்பட்டதற்கும் மாணவியின் இறப்பிற்கும் ஆழ்ந்த அனுதாபங்களை எங்கள் சங்கத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

    தி.மு‌.க. ஆட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையில் கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்துள்ளது. பள்ளியை சூறையாடியும் சட்டம் ஒழுங்கை கையில் எடுத்து தீய சக்திகள் ஒன்று கூடி கட்டவிழ்த்து நடத்திய வன்முறை சம்பவங்கள் மனதை பதை பதைக்க வைக்கிறது.

    தமிழ்நாட்டில் இதுபோன்ற தாக்குதல் நடத்தும் தீய சக்திகளுக்கு எதிராக குற்றம் பாயும் வண்ணம் சட்டங்கள் இயற்ற வேண்டும். தனியார் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர் மற்றும் பள்ளி சொத்துகளுக்கு பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    மேலும் வேலூர் மாவட்டத்தில் 89 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 21 சிபிஎஸ்சி மற்றும் பள்ளிகள் உட்பட 175 தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் இன்று 40 சதவீத தனியார் பள்ளிகள் இயங்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×