ஈரோட்டில் காய்கறிகள் விலை குறைந்தது

ஈரோடு வ.உ.சி.காய்கறி பெரியமார்க்கெட்டில் வடகிழக்கு பருவமழை, பனி தாக்கம் காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்தது. இதனால் விலையும் தாறுமாறாக உயர்ந்தது. தற்போது வரத்து அதிகரிப்பால் விலை குறையத்தொடங்கியது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on

ஈரோடு:

ஈரோடு வ.உ.சி.காய்கறி பெரியமார்க்கெட்டில்  வடகிழக்கு பருவமழை,  பனி தாக்கம் காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்தது. இதனால் விலையும் தாறுமாறாக உயர்ந்தது. தற்போது வரத்து அதிகரிப்பால் விலை குறையத்தொடங்கியது.

கடந்த சில நாட்களாக  தேவைக்கேற்ப காய்கறி விளைச்சல் இல்லாததால்  அனைத்து வகையான காய்கறி விலையும் கிடுகிடுவென உயர்ந்தது.  

குறிப்பாக தக்காளி, முருங்கைக்காய் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வந்தது.  இதனால் நடுத்தர, ஏழை மக்கள் மிகவும் அவதி அடைந்துவந்தனர்.   

தாளவாடி,  சத்தியமங்கலம் பர்கூர், அந்தியூர் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து காய்கறிகள் வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு வருவது வழக்கம். 

கடந்த சில நாட்களாகவே காய்கறி வரத்து குறைந்தே வந்தது.  இந்நிலையில் இன்று வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.  

இதனால் கடந்த  வாரத்தில் விற்கப்பட்ட காய்கறிகள் விலை இந்த வாரத்தில் ரூ.10 வரை குறைந்துள்ளது.  கத்திரிக்காய் கடந்த வாரம் ரூ.100 முதல் 120 வரை விற்றது.  ஆனால் இன்று ரூ.50-க்கு விற்கப்பட்டு வருகிறது. 

இதேபோல் கடந்த வாரம் 120-க்கு விற்கப்பட்ட கருப்புபட்டை அவரை இன்று ரூ. 90-க்கு விற்பனையானது.  

வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டில்  விற்கப்பட்ட மற்ற காய்கறிகளின் விலை கிலோவுக்கு வருமாறு:- பீட்ரூட்-80, கேரட்-  70 முதல் 80 வரை, பீன்ஸ்-50, முட்டைக்கோஸ்-60, மிளகாய்-100, இஞ்சி-50, உருளைக்கிழங்கு-50, சேனைக்கிழங்கு-30, சுரக்காய்-20, பீர்க்கங் காய்-50, முள்ளங்கி-40, பாவக்காய்-50, முருங்கைக்காய்-250, சின்னவெங்காயம், பெரிய வெங்காயம்-60, காலிப்பிளவர்-40, தக்காளி-50 முதல் 60 வரை விற்பனையானது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com