search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் மாசி மாத தெப்பத்திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
    X

    திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் மாசி மாத தெப்பத்திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

    • தெப்பக்குளத்தில் 3 முறை உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
    • 2-வது நாள் விழா இன்றும் 3-வது நாள் விழா நாளையும் நடைபெறுகிறது.

    திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற திருத்தலமாகும். கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாத தெப்ப உற்சவம் 3 நாள்கள் நடைபெறுவது வழக்கமாகும்.

    அதேபோல் இந்த ஆண்டுக்கான மாசி மாத தெப்ப உற்சவம் கோலாகலமாக தொடங்கியது. நேற்று முதல் நாள் தெப்ப உற்சவம் நடைபெற்றது.

    முன்னதாக கோவிலில் இருந்து வைத்திய வீரராகவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக புறப்பட்டார். இதைத் தொடர்ந்து குளக்கரையில் ஸ்ரீதேவி, பூ தேவி சமேதராய் வீற்றிருந்த வீரராகவருக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றன.

    பின்னர் மின் அலங்காரம் செய்யப்பட்ட தெப்பக்குளத்தில் 3 முறை உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தெப்பத் திருவிழாவை கண்டு ரசித்தனர். தெப்ப திருவிழாவின் 2-வது நாள் விழா இன்றும் 3-வது நாள் விழா நாளையும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து உள்ளனர்.

    Next Story
    ×