வாழப்பாடி பேரூராட்சி மன்ற கூட்டம்

வாழப்பாடி பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் கவிதா சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தம்மம்பட்டி சாலையில் மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வசதிக்கு ரூ.1 கோடி செலவில் வாய்க்கால் அமைத்தல், கிழக்குக்காடு பகுதிக்கு ரூ.1.25 கோடியில் புதிய தார்சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்த தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.
வாழப்பாடி பேரூராட்சி மன்ற கூட்டம்
Published on

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் கவிதா சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் கணேசன், துணைத் தலைவர் எம்.ஜி.ஆர்.பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், சத்தியக்குமாரி சரவணன், வசந்தி வெங்கசேன், சத்தியா சுரேஷ், பெரியம்மாள், ரஞ்சித்குமார், வெங்கடேஷ்வரன், லட்சுமி செல்வம், புவனேஸ்வரி மதியழகன், ராணி மாதேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில், தம்மம்பட்டி சாலையில் மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வசதிக்கு ரூ.1 கோடி செலவில் வாய்க்கால் அமைத்தல், கிழக்குக்காடு பகுதிக்கு ரூ.1.25 கோடியில் புதிய தார்சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்த தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.

வாழப்பாடியில் உழவர் சந்தை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கும், திட்டத்தை செயல்படுத்த பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு கொடுத்து வரும் அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும், தன்னார்வலர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com