search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முள்ளக்காடு ஸ்ரீ நூதன விநாயகர் ஆலய வருஷாபிஷேக விழா
    X

    வருஷாபிஷேக விழா நடைபெற்றபோது எடுத்தபடம்.

    முள்ளக்காடு ஸ்ரீ நூதன விநாயகர் ஆலய வருஷாபிஷேக விழா

    • முள்ளக்காடு ஸ்ரீ நூதன விநாயகர் ஆலயம் வருஷாபிஷேகவிழா நடைபெற்றது.
    • விழாவையொட்டி கோவில் விமானகோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள முள்ளக்காடு ஸ்ரீ நூதன விநாயகர் ஆலயம் வருஷாபி ஷேகவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 8 மணிக்கு விநாயகர் பூஜை, மகாசங்கல்பம், மகாகணபதி ஹோமம், நவகிரகஹோமம், துர்காஹோமம்,லட்சுமி பூஜைகள் நடைபெற்று தீபாராதனையும், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து கோவில் விமானகோபுர கலசங்க ளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதனை யடுத்து அலங்காரம் தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக குழு தலைவர் வக்கீல் சொக்கலிங்கம், செயலாளர்கள் சேகர் என்ற சந்திரசேகர், சின்னராஜ் என்ற ரகுபதி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். விழாவில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் வக்கீல் செல்வகுமார், முள்ளக்காடு ஊராட்சி மன்ற தலைவர் கோபிநாத் நிர்மல், ஆறுமுகம் ஜூவல்லர்ஸ் அதிபர் பலவேச கார்த்திகேயன், முள்ளக்காடு வியாபாரிகள் சங்கத் தலைவர் முனியத்தங்கம் நாடார், செயலாளர் முத்துராஜ், உப்பு உற்பத்தியாளர்கள் தங்கராஜ் நாடார், சிவாகர், முகேஷ் சண்முகவேல், ஞானவேலன், தி.மு.க. நிர்வாகிகள் பக்கிள்துரை, சில்வர்சிவா, ஒன்றிய பா.ஜ.க. பொதுச் செயலாளர் பிரபாகர், செந்தில்குமார் ஜெய பாண்டியன்,அழகேசன் அருணாசல பாண்டியன், விஜய் கேபிள்பொன்ராஜ், அஜித் குமார் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சோலை குமார் உட்பட ஊர் பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×