search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி அருகே காளியம்மன் கோவிலில் வருசாபிஷேகம்
    X

    சிவகிரி அருகே காளியம்மன் கோவிலில் வருசாபிஷேகம்

    • காளியம்மன் உள்பட பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான அபிஷேகம் நடைபெற்றது.
    • அம்மனுக்கு பட்டு ஆடைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி அருகே தட்டாங்குளம் காளியம்மன் கோவிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் வருசாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை கோவில் முன்பு யாக சாலைகள் அமைக்க ப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க வருசாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் காளியம்மன் உள்பட பரிவார தெய்வங்கள் தலைமலை வீரப்பன், பேச்சியம்மன், கன்னி விநாயகர், கருப்பசாமி, மாரியம்மன், பார்வதி, சின்ன மாரியம்மன், சின்ன காளியம்மன் ஆகிய வற்றிற்கு விபூதி, குங்குமம், சந்தனம், பன்னீர், எலுமிச்சை, இளநீர் உள்பட 18 வகையான நறுமண பொ ருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    சந்தன காப்பு அலங்காரத்தில் பட்டு ஆடைகள், மலர் மாலை கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டி சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்ன தானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பவுர்ணமி பூஜை வழி பாட்டு குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×