search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வால்பாறை நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்
    X

    வால்பாறை நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்

    • ரூ.13 கோடி செலவில் தார் சாலை அமைக்கும் பணிக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • கூட்டத்தில் 70 பணிகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியின் சாதாரண நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி தலைைம தாங்கினார். துணைத் தலைவர் தாமா செந்தில்குமார் மற்றும் பொறியாளர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தனர். இதில் 21 கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வால்பாறை பகுதியில் நீண்ட நாள் கிடப்பில் இருந்த 12 மற்றும் 13-வது வார்டுக்கு உட்பட்ட ஊசிமலை பகுதி மற்றும் வெள்ளமலை பகுதியில் 13 கிலோமீட்டர் தொலைவு வரை ரூ.13 கோடி செலவில் தார் சாலை அமைக்கும் பணிக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் வால்பாறை பகுதியில் சில தினங்களுக்கு முன்பு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஆற்றில் மூழ்கி இருந்ததை அடுத்து அப்பகுதியில் மக்கள் யாரும் செல்லாதவாறு கம்பி வேலி அமைத்து, அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிப்பது, வால்பாறையில் 20 இடங்களில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்தில் அனைத்து வார்டுகளிலும் பணிகள் மேற்கொள்ளும் விதமாக மொத்தம் 70 பணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதனை தொடர்ந்து பேசிய கவுன்சிலர்கள், வால்பாறை பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் துவங்கியுள்ள நிலையில் குடியிருப்பு பகுதியில் தெரு விளக்கு அமைக்க வேண்டும்.

    பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். 17-வது வார்டு முடிஷ் பகுதியில் புதிய பஸ் நிறுத்தம் கட்டி தர வேண்டும் படகு இல்லம் மற்றும் தாவரவியல் பூங்காவிற்கு குறைந்த கட்டணத்தில் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    Next Story
    ×