search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி கூட்டம்
    X

    வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி கூட்டம் நடந்தது.

    வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி கூட்டம்

    • எனது வார்டு பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடங்கப்பட்டு பாதியிலேயே நிற்கின்றன.
    • அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்படும்.

    சீர்காழி:

    வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் மன்ற கூட்டம் நடைபெற்றது.பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை வகித்தார்.

    செயல் அலுவலர் அசோகன், துணைத் தலைவர் அன்புச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பதிவரை எழுத்தர் உதயகுமார் மன்றத் தீர்மானங்களை பிடித்தார்.

    கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-

    வித்யா தேவி:-

    எனது வார்டு பகுதியில் சேதம் அடைந்த நிலையில் குடிநீர் குழாய் உள்ளது. இதனை சீரமைத்து தர வேண்டும். ராஜா கார்த்திகேயன்:-

    எனது வார்டு பகுதியில் எந்த வளர்ச்சி பணிக ளும் இதுவரை மேற்கொள்ள ப்படவில்லை. காட்டு நாயக்கன் தெருவில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைத்து தர வேண்டும்.

    முத்துக்குமார்:-

    வைத்தீ ஸ்வரன் கோயில் பகுதிகளில் உள்ள பொதுப்பணி த்துறைக்கு சொந்தமான வாய்க்கால்களை தூர்வா ரப்படாததால் இந்த ஆண்டு மழை காலங்களில் மழைநீர் வடிய வழியில்லாமல் ஊருக்குள் மழைநீர் புகும்.

    முன்கூட்டியே பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கென்னடி:-

    எனது பகுதியில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும்.

    மீனா:-

    பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் . மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    பிரியங்கா: -

    எனது வார்டு பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடங்கப்பட்டு பாதியிலேயே நிற்கின்றன. இந்த பணியினை துரிதப்படுத்த வேண்டும்.

    துணைத் தலைவர் அன்புசெழியன்:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலுக்குள் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேவையான வளர்ச்சிப் பணிகளை தேர்வு செய்து பணிகளை தொடங்க வேண்டும்.

    தலைவர் பூங்கொடி:-

    வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதியில் வரும் மார்ச் மாதம் முதல் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் (100 நாள் வேலை) தமிழக அரசு சார்பில் செயல்படுத்த உள்ளது.

    இதற்கு அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பி னர்களும் ஆதரவு தர வேண்டும்.

    உறுப்பி னர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிதி நிலைக்கேற்ப உடனுக்குடன் நிறைவேற்றப்படும் என்றார்.

    Next Story
    ×