ஊட்டியில் விடுபட்ட வார்டுகளிலும் பாதாள சாக்கடை பணி- நகராட்சி கவுன்சிலர் ஜார்ஜ் வேண்டுகோள்

ஊட்டி நகராட்சியில் 5மாதங்களாக வளர்ச்சி பணிகளுக்கு டெண்டர் விடவில்லை. வளர்ச்சி பணிகளுக்கு டெண்டர் விட வலியுறுத்தல்
ஊட்டியில் விடுபட்ட வார்டுகளிலும் பாதாள சாக்கடை பணி- நகராட்சி கவுன்சிலர் ஜார்ஜ் வேண்டுகோள்
Published on

ஊட்டி,

ஊட்டி நகராட்சி மாதந்திர கூட்டம் தலைவர் வாணீஸ்வரி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ரவிக்குமார், கமிஷனர் ஏகராஜ் மற்றும் கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நகரமன்ற உறுப்பினரும், நகர தி.மு.க செயலாளருமான ஜார்ஜ் பேசுகையில் கூறியதாவது:-

ஊட்டி நகராட்சியில் 7 வார்டுகளில் மட்டும் ரூ.7 கோடியில் வளர்ச்சி பணிகள் நடப்பதாக கூறப்படுகிறது. மற்ற வார்டுகளில் வேலை நடக்கவில்லை. எனவே, அனைத்து வார்டுகளிலும் ஒரே மாதிரியாக வளர்ச்சி பணிகளை பிரித்துக் கொடுத்து பணிகளை மேற்கொளள வேண்டும்.

ஊட்டி நகராட்சியில் 5மாதங்களாக வளர்ச்சி பணிகளுக்கு டெண்டர் விடவில்லை. அதனை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். படகு இல்லம் அருகே சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தில் தொடர்ந்து நடக்கும் கட்டுமான பணிகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com