பஸ் நிலைய நடைபாதையில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் பயணிகள் அவதி

கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். புதிய பஸ் நிலையம் கடந்த ஏப்ரல் மாதம் 2000-ல் திறக்கப்பட்டது.
பஸ் நிலைய நடைபாதையில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் பயணிகள் அவதி
Published on

அன்னூர்,

கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட அன்னூர் புதிய பஸ் நிலையம் கடந்த ஏப்ரல் மாதம் 2000-ல் திறக்கப்பட்டது.

இந்த பஸ் நிலையத்தில் இருந்து கோவை, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், மற்றும் அவினாசி போன்ற முக்கிய பகுதிகள் மற்றும் அன்னூரை சுற்றி உள்ள கிராம பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் என 500க்கும் அதிகமான பஸ்கள் சென்று வருகின்றன.

இந்த பஸ் நிலையத்தில் வேலைக்கு செல்வோர் மற்றும் பஸ் நிலையம் வருவோர், மக்கள் நடக்கும் நடைபாதையில் தங்களது இரு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகவும் அவதியடைகின்றனர்.

மேலும் மழைக்காலத்தில் பயணிகள் உள்ளே அமர்வதிலும் மற்றும் நிற்பதிலும் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.மழைக்காலம் என்பதினால் கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இங்கு வாகனங்களை உள்ளே நிறுத்த அனுமதி இல்லை என்ற வாசகத்தை எழுதி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com