

வடமதுரை:
வடமதுரை அருகில் உள்ள தனியார் நூற்பாலையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சோனாலி (வயது 19), சுபாஸ்ரீ (19) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். சம்பவத்தன்று மில்லில் இருந்து வெளியே சென்ற அவர்கள் மாயமாகினர். இதுகுறித்து மில் மேலாளர் பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.