search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை அருகே திடீரென பற்றி எரிந்த தீயில் 2 கூரை வீடுகள் எரிந்து சாம்பல் போலீசார் விசாரணை
    X

    தீப்பிடித்து எரிந்ததில் வீடு சாம்பலாகி பொருட்கள் சேதம் அடைந்தன.

    தஞ்சை அருகே திடீரென பற்றி எரிந்த தீயில் 2 கூரை வீடுகள் எரிந்து சாம்பல் போலீசார் விசாரணை

    • திடீரென இவர்களின் கூரை வீடு தீ பிடித்து எரிய தொடங்கியது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர்.
    • சந்திரசேகரன் எம்.எல்.ஏ பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி அரசால் வழங்கப்படும் நிவாரண உதவிகளை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே உள்ள ராமநாதபுரம் கிராமம் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது சகோதரர் செல்லப்பாண்டியன். இருவரும் இசை கலைஞர்கள். அருகருகே கூரை வீட்டில் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை திடீரென இவர்களின் கூரை வீடு தீ பிடித்து எரிய தொடங்கியது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். மேலும் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

    இது குறித்து தஞ்சை மற்றும் திருவையாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் 2 கூரை வீடுகள் முழுவதும் எரிந்து விட்டது.

    இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பல் ஆனது.

    இது குறித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். என்ன காரணத்திற்காக வீடு தீப்பற்றி எரிந்தது என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு சென்று உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி அரசால் வழங்கப்படும் நிவாரண உதவிகளை வழங்கினார். தஞ்சாவூர் தாசில்தார் சக்திவேல் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×