திருச்சியில் ஹேப்பி ரோடு நிகழ்ச்சி

திருச்சி நடந்த ஹேப்பி ரோடு நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்அமைச்சர்கள் நேரு, மகேஸ் தொடங்கி வைத்தனர்
திருச்சியில் ஹேப்பி ரோடு நிகழ்ச்சி
Published on

திருச்சி,

திருச்சியில் கோர்ட் அருகே உள்ள ஸ்டுடென்ட் சாலையில் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி மாநகராட்சி மற்றும் காவல் துறை சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட "ஹேப்பி சாலை" நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினர். நிகழ்ச்சியில் காவல்துறை ஆணையர் சத்யபிரியா, மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளும் பொதுமக்களும், மாணவ மாணவிகளும், சமூக ஆர்வலர்களும் பெருந்திரளாக பங்கேற்றனர்

X

Maalai Malar
www.maalaimalar.com