

திருச்சி:
திருச்சி பீமநகர் புதிய ராஜா காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரிக்கா. இவர் நேற்று காலை பறவைகள் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்து சந்திரிகா கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.