search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி ம.தி.மு.க. செயலாளராக வெல்லமண்டி சோமு தேர்வு
    X

    திருச்சி ம.தி.மு.க. செயலாளராக வெல்லமண்டி சோமு தேர்வு

    • போட்டியின்றி வெல்லமண்டி சோமு தேர்தெடுக்கப்பட்டார்
    • மாவட்ட, பகுதி நிர்வாகிகளும் அறிவிப்பு

    திருச்சி,

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தலைமைக்கழகச் செயலாளர் துரை.வைகோ ஆகியோரது வழிகாட்டலில் திருச்சி கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ம.தி.மு.க. அலுவலகமான மண்ணச்சநல்லூர் நடராஜன் மாளிகையில் தலைமை கழக பிரதிநிதி ம.தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் ஆசைத்தம்பி வேட்பு மனுக்களை பெற்றுக் கொண்டு, முடிவுகளை அறிவித்தார்.அதன்படி திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளராக வெல்லமண்டி சோமு (எ) இரா.சோமசுந்தரத்தை போட்டியின்றி தேர்ந்தெடுத்து அறிவித்தார். அதேபோல் திருச்சி மாநகர் மாவட்ட அவைத் தலைவராக புலவர் வே.தியாகராசன், மாவட்ட பொருளாளராக யானை கண்ணன், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்களாக கவுன்சிலர் அப்பீஸ் (எ) முத்துக்குமார், எல்லக்குடி அன்புராஜ், துரை.வடிவேல், மலர்விழி ராஜன்,தலைமை செயற்குழு உறுப்பினர்களாக முன்னாள் கவுன்சிலர் முகமது முஸ்தபா, திலகவதி கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர்களாக பெல் பத்மநாபன், துரைராஜ், க.செல்வராஜ்,இரா.மனோகரன், ஜான்சன், மதலைமுத்து ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.மேலும் புதிய பகுதிச் செயலாளர்களாக ராமமூர்த்தி, சிவானந்தம், மனோகரன், கரிகாலன், ஆசிரியர் முருகன், கோபாலகிருஷ்ணன், காஜா மைதீன், சோமு, ஜெயச்சந்திரன், எப்.எஸ்.ஜெயசீலன், மெடிக்கல் முத்துகிருஷ்ணன், ஆடிட்டர் வினோத்குமார் மற்றும் நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

    Next Story
    ×