திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் தரைக்கடைகள் அகற்றம்-வியாபாரிகள் மறியல்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி அதிகாரிகள் தரைக்கடைகளை திடீரென்று அகற்றியதை கண்டித்து வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்மேலும் இந்த பகுதிகளில் அனுமதி இன்றி தள்ளுவண்டி கடைகளை நிறுத்தினால் வியாபாரிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் தரைக்கடைகள் அகற்றம்-வியாபாரிகள் மறியல்
Published on

திருச்சி:

திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதிகளில் நகர பேருந்துகள் நிற்கும் இடத்தில் பழக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வந்தது.

இந்த கடைகள் வைத்திருந்த காரணத்தினால் நகர பேருந்துகள் பேருந்து நிலையத்தில் நிறுத்த முடியாத நிலையும், நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் சரியாக நடந்து செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் இன்று திருச்சி பொன்மலை உதவி ஆணையர் சண்முகம் தலைமையிலும், பாவா பக்ருதீன், சுகாதார அலுவலர் ஜோதி பாசு, வினோத் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் இன்று திடீரென மத்திய பேருந்து நிலையப் பகுதிகளில் ஆய்வில் ஈடுபட்டார்கள்.

திருச்சி நகர பேருந்துகள் இருக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த பழக்கடைகள் தள்ளுவண்டி கடைகள், கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அனைத்தையும் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அப்புறப்படுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டது. மேலும் இந்த பகுதிகளில் அனுமதி இன்றி தள்ளுவண்டி கடைகளை நிறுத்தினால் வியாபாரிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் மத்திய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு கொண்டிருந்த தரைக்கடைகளை அப்புறப்படுத்தியதால் அதை கண்டித்து உடனடியாக தரைக்கடை வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் கூறியதாவது:

எங்களிடம் எந்த முன்னறிவிப்பும் நாங்கள் நடத்தி வந்த தரைக்கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தி விட்டனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கின்ற நிலை உருவாகியுள்ளது.

யாருக்கும் பாதிப்பு இல்லாமல் தான் நாங்கள் கடை நடத்தி வருகிறோம். அதிகாரிகள் எங்களை இது போன்ற நிலைக்கு தள்ளி விட்டார்கள் இதை கண்டித்து நாங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com