என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
துவரங்குறிச்சி அருகே புரவி எடுப்பு திருவிழா
- துவரங்குறிச்சி அருகே புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.
- தெய்வங்கள்-விலங்குகளின் சுடுமண் சிலைகளை சுமந்து சென்ற பக்தர்கள்
திருச்சி:
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே உள்ள மாங்கனாபட்டியில் சின்னக்கன்னிமார், வில்லுக்காரன் கோவில்கள் அங்குள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளன. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் புரவி எடுத்தல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டும் விழாவானது நேற்று மாலை நடை பெற்றது. மாங்கனாபட்டி காளியம்மன் கோவிலில் இருந்து விநாயகர், வில்லுக்காரன், சின்னக்கன்னிமார், கிருஷ்ணர், குதிரை, ஆடு, மாடு, நாய், கோழி, மனித உருவம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் செய்யப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சுடுமண் சிலைகளை நேர்த்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் தங்கள் தலையில் சுமந்து கொண்டு மாங்கனாபட்டி மலையில் உள்ள சின்னக்கன்னிமார், வில்லுக்காரன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
மேலும் இரும்பினால் செய்யப்பட்ட வேல், சூலாயுதம், வில் அம்புகளையும் ஊர்வலமாக எடுத்து வந்தனர். மலையடிவாரத்தில் சிலைகளை இறக்கி வைத்த பக்தர்கள் அங்கு சிலைகளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு சுவாமி சிலைகளின் கண் திறக்கப்பட்டது. பின்னர் மீண்டும் சிலைகளை தலையில் சுமந்தவாறு கோவிலுக்குச் சென்றனர். அங்கு தரையில் தரையில் நிறுத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பெண்கள் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். கொரோனா பெருந்தொற்கு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இவ்விழாவில் எண்டபுளி, மாங்கனாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்