திருச்சியில் வாடகைக்கு வீடு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு

திருச்சி கே.கே.நகர் சுந்தர் நகர் 7-வது குறுக்கு தெரு பகுதியை சேர்ந்த செண்பகவல்லி வாடகைக்கு வீடு உள்ளதாக அறிவிப்பு பலகையை தொங்கவிட்டுள்ளார். வீடு பார்ப்பது போல் வந்த மர்ம நபர்கள், வீட்டில் வாடகை குறித்து விசாரித்தனர்
திருச்சியில் வாடகைக்கு வீடு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
Published on

திருச்சி

திருச்சி கே.கே.நகர் சுந்தர் நகர் 7-வது குறுக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் செண்பகவல்லி (வயது70). இவர் தன்னுடைய வீட்டில் வாடகைக்கு வீடு உள்ளதாக அறிவி ப்பு பலகையை தொங்கவிட்டுள்ளார். இதையடுத்து நேற்று வீடு பார்ப்பது போல் வந்த மர்ம நபர்கள், வீட்டில் வாடகை குறித்து விசாரித்தனர்.

பின்பு அவர்களை செண்பகவல்லி மாடியில் உள்ள வீட்டை காட்டுவதற்காக அழைத்து சென்றார். அப்பொழுது திடீரென்று செண்பகவள்ளியை சமையல் அறைக்கு தள்ளி அவர் அணிந்திருந்த 8.5 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளார்.

இது குறித்து செண்பகவல்லி கே.கே.நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com