search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி
    X

    துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி

    • துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது
    • ஜமாபந்தி நிகழ்ச்சியில் 751 மனுக்கள் பெறப்பட்டு அதில் 319 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
    துறையூர்,


    திருச்சி மாவட்டம் துறையூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1432 பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி மற்றும் குடிகள் மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் மாதவன் தலைமை வகித்தார். வருவாய் வட்டாட்சியர் வனஜா முன்னிலை வகித்தார். ஜமாபந்தி நிகழ்ச்சியில் 751 மனுக்கள் பெறப்பட்டு அதில் 319 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 34 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 398 மனுக்கள் விசாரணையில் உள்ளது. இந்நிகழ்ச்சியில் சமூக நலம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி, வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் தனி வட்டாட்சியர்கள் முருகன், பழனிவேல், வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் அகிலா, தலைமை இடத்து துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ், மண்டல துணை வட்டாட்சியர்கள் முத்து, செந்தில்குமார், வட்ட வழங்கல் அலுவலர் தமிழ்செல்வன், வட்டத் துணை ஆய்வாளர் ஸ்ரீராம்குமார் உள்ளிட்ட அலுவலக பணியாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், விவசாய சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×