search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம் கோவில்கள், தேவாலயங்களில் நள்ளிரவில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு பிரார்த்தனை
    X

    திருச்சியில் களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம் கோவில்கள், தேவாலயங்களில் நள்ளிரவில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு பிரார்த்தனை

    • கோவில்கள், தேவாலயங்களில் நள்ளிரவில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு பிரார்த்தனை நடத்தினர்
    • ஆங்கில புத்தாண்டை–யொட்டி இரவு ஓட்டல்களில் விருந்து மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    திருச்சி:

    2023 ஆங்கில புத்தாண்டையொட்டி திருச்சியில் இன்று கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. தேவாலயங்களில் நேற்றிரவு சிறப்பு பிரார்த்தனை நடை–பெற்றது. இதில் பொது–மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண் டாட்டத்திற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதையடுத்து நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகளில் நடன, கலை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.இந்தநிலையில் 2022-ம் ஆண்டு முடிவடைந்து நேற்றிரவு 12 மணிக்கு 2023-ம் ஆண்டு பிறந்தது. ஆனால் இந்த ஆண்டு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாததால் புத்தாண்டு கொண்டாட்டம் களை–கட்டியது. இதையடுத்து பொது–மக்கள் தங்களது நண்பர்கள், உறவினர்க–ளிடம் வாழ்த்துக்களை பரி–மாறி கொண்டனர்.திருச்சி, அரியலூர், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்க–ளில் ஆங்கில புத்தாண்டை–யொட்டி இரவு ஓட்டல்களில் விருந்து மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.அதேபோல் கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் நள்ளிரவு நடைபெற்ற வழிபாடுகள் மற்றும் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகளில் அதிக அளவிலானோர் கலந்துகொண்டனர். இளை–ஞர்கள் இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் இருசக்கர வாகனங்களில் சாலைகளில் உலா வந்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.புத்தாண்டையொட்டி திருச்சி உள்பட 5 மாவட் டங்களிலும் நேற்றிரவு பேக்கரி மற்றும் ஸ்வீட்ஸ் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் பலர் விதவிதமான கேக்குகளை வாங்கி சென்றனர். இதே–போல் 10 மணி வரை சைவ, அசைவ உணவு ஓட்டல் களில் பலர் தங்களது நண் பர்களுடன் வந்து உணவு சாப்பிட்டு மகிழ்ந்தனர். குறிப்பாக அசைவ உணவு ஓட்டல்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.2023 ஆங்கில புத்தாண் டையொட்டி திருச்சி–யில் ஸ்ரீரங்கம் ரெங்க–நாதர் கோவில், சமய–புரம் மாரியம்மன் கோவில், உறையூர் வெக்காளி–யம் மன் கோவில், திருவா–னைக்காவல் அகிலாண் டேஸ்வரி, ஜம்பு–கேஸ்வரர் கோவில், திருச்சி மலைக் கோட்டை தாயு–மான சுவாமி கோவில், உச்சிப் பிள்ளையார் கோவில், வயலூர் முருகன் கோவில், கல்லுக்குழி ஆஞ்சநே–யர் கோவில் திருச்சி கண் டோன்மென்ட் அய்யப்பன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்க–ளிலும் இன்று அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடை–பெற்றது.உள்ளூர் பக்தர்கள் மட்டு மின்றி சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள், மேல் மருவத்தூர் ஆதிபாராசக்தி கோவிலுக்கு செல்லும் செவ்வாடை பக்தர்கள், பாத யாத்திரையாக வந்த பக்தர்கள் என திரளானோர் குவிந்தனர்.மேலும் கடுமையான குளிரையும் பொருட்படுத் தாமல் அனைத்து கோவில் களிலும் பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.இதேபோல் மேலப்புதூர் தூய மரியன்னை ஆல–யம், பொன்மலை புனித சூசையப் பர் ஆலயம், புத்தூர் பாத்திமா ஆலயம், ஏ.ஜி.சர்ச், புனித சந்தியா–கப்பர் ஆல யம், புனித ஆரோக்கிய மாதா ஆலயம் உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ தேவா–லயங்களிலும் நேற்றி–ரவு இரவு முதல் கிறிஸ்த–வர் கள் பிரார்த்தனையில் ஈடு–பட்டனர்.புத்தாண்டு கொண்டாடத் தின் போது எந்தவித அசம் பாவித சம்பவங்களும் நடை பெறாமல் இருப்பதற்காக திருச்சி போலீசார் பல்வேறு முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். திருச்சியில் ஒருசில இடங்களில் விதி–களை மீறி இருசக்கர வாக–னங்களில் ரேஸ் சென்ற இளைஞர்களை பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்த–னர்.

    Next Story
    ×