search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் குரூப்-4 போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச மாதிரி தேர்வு
    X

    திருச்சியில் குரூப்-4 போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச மாதிரி தேர்வு

    • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 போட்டி தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு 19-ம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது.
    • என்.ஆர். ஐ ஏ எஸ் அகாடமி இயக்குனர் விஜயாலயன் பாடப்பகுதி குறித்த வகுப்பு மற்றும் மாணவர்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார்

    திருச்சி:

    திருச்சி மாவட்ட மைய நூலகர் தனலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

    திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் என்.ஆர்.ஐ ஏ எஸ் அகாடமி சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 போட்டி தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு 19-ம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது.

    இத்தேர்வில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பாடப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.மாணவர்களுக்கு வினா தொகுப்பு வழங்கப்பட்டு ஓ எம் ஆர் விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் தேர்வு நடைபெறும் தேர்வை தொடர்ந்து என்.ஆர். ஐ ஏ எஸ் அகாடமி இயக்குனர் விஜயாலயன் பாடப்பகுதி குறித்த வகுப்பு மற்றும் மாணவர்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார். போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகள் இதில் கலந்துகொண்டு பயன் அடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×