போலீஸ் உதவி கமிஷனருக்கு கோர்ட்டு பிடிவாரண்ட்

6 மாதமாக கோர்ட்டு சார்பில் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் ஆஜராகாததால் பிடிவாரண்ட்
போலீஸ் உதவி கமிஷனருக்கு கோர்ட்டு பிடிவாரண்ட்
Published on

திருச்சி:

கோவை மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க நடவ–டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் வருவாய்த்து–றையின–ருடன் குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீ–சாரும் ஈடுபட்டு வருகி–றார்கள். இந்நிலையில் கடந்த 2008-ம் ஆண்டில் பொள்ளாச்சி குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜூ என்பவர் ரேஷன் அரிசி கடத்தியவர்களை கைது செய்தார். இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள 4-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஆஜராகும்படி அப்போதைய இன்ஸ்பெக்டர் ராஜூவுக்கு கடந்த 6 மாதமாக கோர்ட்டு சார்பில் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர் பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு ஆஜராக கடந்த 11-ந்தேதி திருச்சியில் பணியாற்றி வரும் ராஜூவுக்கு போலீசார் மூலம் நேரில் சென்று அழைப்பாணையை கொடுத்தனர். இருந்தபோதிலும் அவர் நேற்று நடந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகி சாட்சி அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு சரவணபாபு உத்தரவிட்டார். தற்போது ராஜூ பதவி உயர்வு பெற்று திருச்சி தில்லை நகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் உதவி கமிஷனராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com