search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் கல்லூரி பஸ்- பள்ளி வேன் நேருக்கு நேர் மோதல் - 10 பேர் படுகாயம்
    X

    திருச்சியில் கல்லூரி பஸ்- பள்ளி வேன் நேருக்கு நேர் மோதல் - 10 பேர் படுகாயம்

    • கூத்தூரில் செயல்படும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து இன்று காலை 50 மாணவர்களுடன் ஸ்ரீரங்கத்தில் இருந்து கூத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
    • விபத்தில் 2 மாணவி, ஒரு மாணவன் மற்றும் பொதுமக்கள் என 10-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.

    திருச்சி,

    திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள கூத்தூரில் செயல்படும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து இன்று காலை 50 மாணவர்களுடன் ஸ்ரீரங்கத்தில் இருந்து கூத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை கண்ணன் என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த பேருந்து ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பாலத்தில் இறங்கும்போது பஸ் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாக ஓடிய பஸ்சை நிறுத்த டிரைவர் கண்ணன் போராடினார். ஆனாலும் அந்த பஸ் சாலையில் ஓரத்தில் நின்றிருந்த ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதுடன் நிற்காமல் எதிரே வந்த மற்றொரு தனியார் பள்ளி வேன் மீது நேருக்கு நேர் மோதி நின்றது.

    இந்த விபத்தில் 2 மாணவி, ஒரு மாணவன் மற்றும் பொதுமக்கள் என 10-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த விபத்து காரணமாக ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பிரதான சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் இல்லை. விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் வேனில் பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை காண பள்ளி மற்றும் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.

    Next Story
    ×