search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான்
    X

    திருச்சியில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான்

    • திருச்சியில் இன்று போதை பொருட்களுக்கு எதிராக நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை கலெக்டர் பிரதீப்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    • போதைப்பொருள் நமது உடல் நலத்தையும், வாழ்வையும் சீரழித்துவிடும். போதைப் பொருட்களை அறவே வெறுத்து ஒதுக்கிட வேண்டும்

    திருச்சி:

    திருச்சி மாவட்ட கலெகடர் அலுவலகத்தில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகின்ற வகையில், மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டத்தினை போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியேற்புடன், மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:

    தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போதைப்பொருள் நமது உடல் நலத்தையும், வாழ்வையும் சீரழித்துவிடும். போதைப் பொருட்களை அறவே வெறுத்து ஒதுக்கிட வேண்டும்.

    இதனை நம்மைச் சுற்றியுள்ள நண்பர்களிடத்திலும் மக்களிடத்திலும் எடுத்துக் கூறி விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். போதைப் பொருட்கள் இல்லாத மாவட்டமாக திருச்சி மாவட்டம் திகழ்ந்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் பாராட்டுகிறேன் என்று பேசினார்.

    இந்நிகழ்வில், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகர காவல் துணை ஆணையர்கள் ஸ்ரீதேவி, அன்பு, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.இனிகோ இருதயராஜ், கோட்டாட்சியர் தவச்செல்வம், உதவி ஆணையர் (கலால்) ரெங்ஙசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி, கோட்டத்தலைவர் ஜெயநிர்மலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இந்த விழிப்புணர்வு மாரத்தான் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி அண்ணா விளையாட்டு அரங்கம் வரை 4 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×