search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்க்கெட் கட்டிடத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர்
    X

    மார்க்கெட் கட்டிடத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர்

    • திருச்சியில் மார்க்கெட் கட்டிடத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் சிக்கினார்
    • ஏரியாவுக்குள் ‘பெரிய ஆளாக வேண்டும்’ என்று துணிகர செயல்

    மலைக்கோட்டை,

    திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பின்புறமுள்ள காளியம்மன் கோவில் தெரு மாநகராட்சி மார்க்கெட் எதிரில் அப்பகுதியை சேர்ந்த குற்ற வழக்கில் தொடர்புடையவர் உள்பட 2 பேர் நேற்று மாலை அமர்ந்து, மது அருந்தியுள்ளனர். அப்போது, ஏரியாவுக்குள் 'பெரிய ஆளாக என்ன செய்யலாம்' என்று தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து அவர்கள், அங்கிருந்த சரக்கு ஆட்டோவில் இருந்து டீசலை டியூப் போட்டு பிடித்து, மதுபாட்டிலில் ஊற்றி டீசல் குண்டாக மாற்றி எதிரில் இருந்த மாநகராட்சி மார்க்கெட் கட்டிடம் மீது வீசியுள்ளனர். அந்த பாட்டில் கட்டிடத்தைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த தகரத்தின் மீது விழுந்து டீசல் தீப்பற்றி எரிந்துள்ளது. இதைப்பார்த்து அப்பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    இதற்கிடையே அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் அப்பகுதியில் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இச்சம்பவத்தால் நேற்று மாலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×