search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பழங்குடியின மக்கள்
    X

    மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பழங்குடியின மக்கள்

    • பாரம்பரிய பாடலுடன் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • வன காப்பு திருவிழா ஊட்டி அருகே உள்ள கக்குச்சி கிராமத்தில் நடைபெற்றது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனத்தை காக்கும் வகையில் வன காப்பு திருவிழா ஊட்டி அருகே உள்ள கக்குச்சி கிராமத்தில் நடைபெற்றது.

    இதில், வனத்துறை அமைச்சா் ராமசந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரம் நடும் விழாவை தொடக்கி வைத்தாா்.

    தொடா்ந்து படுக இன மக்கள் தங்களின் பாரம்பரிய பாடலுக்கு நடனமாடி மரம் வளா்ப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

    விழாவில் 2022 மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டது.ஒவ்வொரு மரத்தையும் தங்களின் குழந்தைகளின் பெயா் சூட்டி வளா்க்க வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    மேலும், மரத்தினால் ஏற்படும் நன்மைகள், வனங்கள் ஏன் காப்பாற்றபட வேண்டும் என்பது குறித்து நாக்கு பெட்டா சங்கம், ஈஷா அறக்கட்டளை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில், கலெக்டர் அம்ரித், மாவட்ட வன அலுவா் சச்சின் துக்காராம் போஸ்லே மற்றும் வன ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    Next Story
    ×