search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தஞ்சையில், போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • ஆம்னி பஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லும் முடிவை கைவிட வேண்டும்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை பணிமனை சி.ஐ.டியு தலைவர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயபால் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் 60 ஆண்டு கால பாரம்பரியமிக்க அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் நிலையத்தை, ஆம்னி பஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லும் முடிவை கைவிட வேண்டும் என்பதை வலியுறித்தி கோஷங்கள் எழுப்ப ப்பட்டன.

    இதில் மாவட்ட துணை செயலாளர் அன்பு, ஆட்டோ மாநகர செயலாளர் ராஜா, தரைக்கடை சங்க தலைவர் மணிமாறன், சிஐடியு எஸ்டிஇசி. மாநில துணைதலைவர்வெ ங்கடேசன், ஏ.ஐ.டி.யு.சி போக்குவரத்து சம்மேளன துணைத் தலைவர் துரை.மதிவாணன், சி.ஐ.டி.யு கும்பகோணம் மண்டல பொருளாளர்ராமசாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பணிமனை துணைதலைவர் பரத்ராஜன் நன்றி கூறினார்.

    Next Story
    ×