search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில்  பயிற்சி பட்டறை
    X

    பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பட்டறை

    • கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் ஆங்கில மொழியில் பேச்சுத்திறன் வளர்ப்பதற்கான பயிற்சி ப்பட்டறை 3 நாட்கள் நடத்தப்பட்டது.
    • இந்நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் ஆங்கில மொழியில் பேச்சுத்திறன் வளர்ப்பதற்கான பயிற்சி ப்பட்டறை 3 நாட்கள் நடத்தப்பட்டது. இதயம் நல்லெண்ணெய் குழும நிறுவனர் முத்துவின் 'பன்ச் ப்ராஜக்ட்' என்ற அமை ப்பின் மூலமாக பல்கலை க்கழகத்தின் மாணவிகளு க்காக நடத்தப்பட்டது. பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்த பல்கலை க்கழகத்தின் துணை வேந்தர் கலா, உலக மயமாக்கல் காரணமாக தனியார் நிறுவனங்கள் பெருகி வரும் தற்போதைய சூழலில் ஆங்கில மொழித்திறனை வளர்த்துக் கொள்வது மிக அத்தியாவசியமானது.

    இப்பல்கலைக்கழகத்தின் மாணவிகள் அனைத்துத் திறன்களையும் கற்பதற்கு தேவையான வாய்ப்பு களையும் பல்கலைக்கழகம் ஏற்படுத்தி வருகிறது. மாணவிகள் அவற்றை சரியான முறையில் பயன்படுத்தி முன்னேற வேண்டும் . பாரதியார் போன்ற பெரும் தமிழ்ப் புலவர்கள் ஆங்கிலத்திலும் இணையான புலமை பெற்றிருந்ததை சுட்டிக் காட்டி பேசினார். பதிவாளர் ஷீலா மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கிளாரா தேன்மொழி ஆகியோர் தொடக்க உரை மற்றும் வாழ்த்துரை வழங்கி னர்.

    முன்னதாக கொடைக்கா னல் ரோட்டரி சங்கத் தலை வர் மதன்குமார் கோவி ந்தன் வரவேற்புரை யாற்றி னார். இந்நிகழ்ச்சியை கரூர், விருதுநகர் மற்றும் கொடை க்கானல் ரோட்டரி சங்கங்களின் ஒருங்கிணை ப்பாளர் ஜெயப்பிரகாஷ், விருதுநகர் பீஹைவ் அகாடமி தலைவர் ஷ்யா ம்ராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். விமலா, கணிணி த்துறை இணைப்பேராசி ரியர் மற்றும் ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் விஜயா ஆகியோர் ஒருங்கிணை ப்பாளராக செயலாற்றினர்.

    இந்நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். அனைத்து மாணவிகளு க்கும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.

    Next Story
    ×