search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்து ஒத்திகை பயிற்சி
    X

    கோப்பு படம்

    தேனி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்து ஒத்திகை பயிற்சி

    • தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை மூலமாக வெள்ளப்பா திப்புகள் குறித்த ஒத்திகைப் பயிற்சி நாளை நடத்திட திட்டமிடப்ப ட்டுள்ளது.
    • பார்வையிட்டு, பேரிடர் காலங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை மூலமாக வெள்ளப்பா திப்புகள் குறித்த மாநில அளவிலான மாதிரி ஒத்திகைப் பயிற்சி நாளை நடத்திட திட்டமிடப்ப ட்டுள்ளது.

    அதன்படிதேனி மாவட்டத்தில் மாதிரி ஒத்திகைப் பயிற்சிகள் நாளை பெரியகுளம் வராகநதி, வீரபாண்டி முல்லைப்பெரியாறு, உப்புக்கோட்டை முல்லைப்பெரியாறு குன்னூர் வைகை ஆறு, லோயர் கேம்ப்-குமுளி மலைச்சாலை என 5 இடங்களிலும் வருவாய்த்து றை, காவல்துறை, தீயணைப்புத்துறை, உள்ளாட்சித்துறைகள், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொது சுகாதாரத்துறை, தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் தொடர்பான இதர துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

    முன்னெச்சரிக்கை செய்யும் குழு, தேடுதல் மற்றும் மீட்புக்குழு, பாதுகா ப்பாக வெளியேற்றும் குழு, நிவாரணம் மையம், பாதுகாப்பாக தங்க வைக்கும் குழு ஆகிய குழு க்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஒத்திகைப் பயிற்சிகளை கண்காணிக்கும் பொருட்டு, துணை ஆட்சியர் நிலையில் மேற்பார்வை அலுவலர்கள் நியமனம் செய்யப்ப ட்டுள்ளனர்.

    மழை, வெள்ளம், புயல், நிலச்சரிவு போன்ற பேரிடர்களின் போது அரசு துறைகளால் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்தும், மேற்படி பேரிடர்களின்போது பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது ஒத்திகைப் பயிற்சிகள் நடைபெறவுள்ளதால், தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும், தங்கள் பகுதிகளில் நடைபெறும் மாதிரி ஒத்திகைப் பயிற்சிகளை பார்வையிட்டு, பேரிடர் காலங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×