புதன் சந்தை மாட்டு சந்தையில் வர்த்தகம் பாதிப்பு

புதன் சந்தையில் நேற்று, காலை 5 மணிக்கு மாட்டு சந்தை தொடங்கி மாலை 3 மணி வரை நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து குறைந்த அளவிலேயே வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் மாடுகள் வரத்தும் குறைந்த அளவிலேயே காணப்பட்டன.
புதன் சந்தை மாட்டு சந்தையில் வர்த்தகம் பாதிப்பு
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த புதன் சந்தையில் நேற்று, காலை 5 மணிக்கு மாட்டு சந்தை தொடங்கி மாலை 3 மணி வரை நடந்தது.

வியாபாரிகள்

ஆடுகளை வாங்க விற்க கேரளா, கர்நாடக மாநிலம் மற்றும் கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து குறைந்த அளவிலேயே வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் மாடுகள் வரத்தும் குறைந்த அளவிலேயே காணப்பட்டன .

இறைச்சி மாடு ரூ.15,000-க்கும், கன்று குட்டிகள் ரூ.8000-க்கும், பசுமாடு ரூ.20,000-க்கும், எருமை மாடு ரூ.25,000-க்கும் விற்பனையானது. தொடர்ந்து பெய்த மழையால் வர்த்தகம் சரிந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். மொத்தம் ரூ. 1 ¾ கோடிக்கு மட்டுமே வியாபாரம் நடந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com