என் மலர்
உள்ளூர் செய்திகள்

தண்டையார்பேட்டை அருகே கத்தியுடன் சுற்றிய ரவுடி கைது
- போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமாக கத்தியுடன் சுற்றிய வாலிபரை மடக்கி பிடித்தனர்.
- சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ரவுடியான முரளி என்கிற பாம் முரளி என்பது தெரிந்தது.
தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பில் கஞ்சா விற்பனை நடப்பதாக புது வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமாக கத்தியுடன் சுற்றிய வாலிபரை மடக்கி பிடித்தனர்.
அப்போது அவருடன் வந்த மற்றொரு வாலிபர் தப்பி ஓடி விட்டார். பிடிபட்ட வாலிபர் புது வண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ரவுடியான முரளி என்கிற பாம் முரளி (22) என்பது தெரிந்தது. அவரிடம் இருந்து கத்தி, கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






