கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை ரூ.50 ஆக உயர்வு

கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது.பிற வியாபாரிகளும் தக்காளி வாங்க வருவதால் விலை உயர்ந்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை ரூ.50 ஆக உயர்வு
Published on

சென்னை:

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் மே 2-வது வாரம் வரை கடும் வெயில் வாட்டி வதைத்தது. அதன்பின் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து, அதன் விலை கிலோ ரூ.50 ஆக உயர்ந்திருந்தது. மழை சற்று இடைவெளி விட்ட நிலையில் தக்காளி விலை கிலோ ரூ.27 ஆக குறைந்திருந்தது.

கடந்த ஒரு வாரமாக தமி ழகம் மற்றும் அதை ஒட்டிய கர்நாடகா, ஆந்திரா எல்லையோர பகுதிகளில் தொடர் மழைபெய்து வருகிறது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்து உள்ளது. இதனால் மீண்டும் தக்காளி விலை நேற்று கிலோ ரூ.50 ஆக உயர்ந்து உள்ளது. கேரட்டும் கிலோ ரூ.30-ல் இருந்து ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மே இறுதி வாரத்தில் கிலோ ரூ.120-க்கு விற்கப்பட்டு வந்த பீன்ஸ், நேற்று கிலோ ரூ.70 ஆக குறைந்துள்ளது.

மற்ற காய்கறிகளான பச்சை மிளகாய் ரூ.65, நூக்கல் ரூ.50, சாம்பார் வெங்காயம் ரூ.60, பாகற்காய் ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.28, முள்ளங்கி, பீட்ரூட் தலா ரூ.25, பெரிய வெங்காயம் ரூ.28, முருங்கைக்காய், வெண்டைக்காய் தலா ரூ.20, புடலங்காய் ரூ.15, முட்டைக்கோஸ் ரூ.12, கத்தரிக்காய் ரூ.10 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. தக்காளி விலை உயர்வு தொடர்பாக கோயம்பேடு மார்க்கெட் காய்கறி வியாபாரிகளிடம் கேட்டபோது, "கடந்த சில தினங்களாக தக்காளி வரத்து குறைந்து வருகிறது.

தமிழகத்தில் உள் மவாட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி அனுப்பும் ஆந்திரா மற்றும் கர்காடகா மாநில எல்லையோர பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக பிற வியாபாரிகளும் தக்காளி வாங்க வருவதால் விலை உயர்ந்துள்ளது. இம்மாதம் முழுவதும் தக்காளி விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும்" என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com