search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரத்தில் கோவில் முன்பு தூக்கி எறியப்பட்ட கழிப்பிட கோப்பைகள்
    X
    கோவில் முன்பு ஏறிப்பட்ட கழிவுகள்.

    பாவூர்சத்திரத்தில் கோவில் முன்பு தூக்கி எறியப்பட்ட கழிப்பிட கோப்பைகள்

    • பழைய மார்க்கெட்டுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள முப்புடாதி அம்மன் கோவில் வாசலின் முகப்பு பகுதியில் பொதுமக்கள் அவ்வப்போது கொட்டி வருகின்றனர்.
    • வீடுகளில் கழிப்பறையில் பயன் படுத்தப்பட்ட கோப்பைகளை சில மர்மநபர்கள் குப்பைகளுடன் சேர்த்து தூக்கி எறிந்து சென்றுள்ளனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் கல்லூரணி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான பழைய மார்க்கெட்டுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள முப்புடாதி அம்மன் கோவில் வாசலின் முகப்பு பகுதியில் நெல்லை- தென்காசி சாலையில் வீடுகளில் பயன்படுத்தப்பட்ட குப்பைகள் மற்றும் கழிவு பொருட்களை பொதுமக்கள் அவ்வப்போது கொட்டி வருவதால் அங்கு துர்நாற்றம் வீசி வருகிறது. ஊராட்சி நிர்வாகமும் தொடர்ந்து அப்புறப்படுத்தி வந்தாலும் பொதுமக்கள் அதனை கண்டு கொள்ளாமல் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் வீடுகளில் கழிப்பறையில் பயன் படுத்தப்பட்ட கோப்பைகளை சில மர்மநபர்கள் குப்பைகளுடன் சேர்த்து தூக்கி எறிந்து சென்றுள்ளதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் அதனை உடனடியாக அப்புறப்படுத்தி அப்பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு என கூடுதலாக குப்பை தொட்டிகளை நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×