search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டையில் கோவில் கொடைவிழாவில் திருவாசகம் முற்றோதுதல்
    X

    கொடைவிழாவில் திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்ற போது எடுத்த படம்.

    செங்கோட்டையில் கோவில் கொடைவிழாவில் திருவாசகம் முற்றோதுதல்

    • இன்று மாலை குண்டாற்றிலிருந்து குற்றால தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் காளியம்மன் கோவில் கொடை விழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. நேற்று கடையநல்லுார் கிருஷ்ணாபுரம் ஆரூத்ரா திருவாசக குழுவின் சார்பில் தேசிய இந்து கோவில் கூட்டமைபின் மாவட்டதலைவா் திருவாசகி சிவபிரேமா தலைமையில், தேசிய இந்து கோவில் கூட்டமைப்பின் தென்காசி மாவட்ட செயலாளா் ராம்நாத் முன்னிலையில் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது. இன்று மாலை 6 மணிக்கு வில்லிசை, 6.30 மணிக்கு செங்கோட்டை குண்டாற்றிலிருந்து குற்றால தீர்த்தம் எடுத்து வருதல், தொடா்ந்து கும்மி பாட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    ஏற்பாடுகளை விழா கமிட்டி நிர்வாகிகள் தலைவா் சுப்பையா, செயலாளா் சண்முகவேல், பொருளாளா் லெட்சுமணன், இளைஞர் சங்க நிர்வாகிகள் தலைவா் ஜெகநாதன், செயலாளா் சிவா, பொருளாளா் காளிராஜ் மற்றும் சேனைத்தலைவா் சமுதாய பெரியோர்கள், இளைஞர் சங்க நிர்வாகிகள் உறுப்பினா்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×