search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெம்பாக்கம் அருகே இளம் பெண் மாயம்
    X

    வெம்பாக்கம் அருகே இளம் பெண் மாயம்

    • கணவர் புகார்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    வெம்பாக்கம் மேல் கஞ்சாங்குழி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 29). சமையல் மாஸ்டர்.

    இவரது மனைவி ரம்யா (23). இவர்களுக்கு மோஷித் (2), கவின் (11 மாத குழந்தை) என 2 மகன்கள் உள்ளனர். சுப்பிரமணி கடந்த 12-ந் தேதி சென்னை வடபழனிக்கு வேலைக்காக சென்றார்.

    பின்னர் வேலை முடிந்து நேற்று காலை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டிலிருந்த குழந்தைகள் இருவரும் அழுது கொண்டிருந்தனர்.

    பின்னர் மனைவி ரம்யாவை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் வீடுகளில் ரம்யாவை சுப்பிரமணி தேடி உள்ளார்.

    எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து பிரம்மதேசம் போலீசில் சுப்பிரமணி புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ரம்யாவை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×