பைக் மீது லாரி மோதி தொழிலாளி பலி

வேகத்தடையில் நிலை தடுமாறி கீழே விழுந்து பரிதாபம் போலீசார் விசாரணை
பைக் மீது லாரி மோதி தொழிலாளி பலி
Published on

செய்யாறு:

வெம்பாக்கம் தாலுகா சேலரி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 31).

இவர் அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை செய்யாறுக்கு வந்த இவர் பைக்கில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார்.

ஆற்காடு சாலையில் ஆதிபராசக்தி கோவில் அருகே சென்றபோது வேகத்தடையில் நிலை தடுமாறியதில் அவர் கீழே விழுந்தார்.

அப்போது எதிரில் வந்த லாரி மோதியதில் படுகாயம் அடைந்தார் ராஜேஷ் .

பின்னர் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவம னையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக் கப்பட்டபின் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து உறவினர் பிரபாகரன் கொடுத்த புகாரின்பே ரில் செய்யாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com