மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

டிரைவர் தப்பி ஓட்டம் போலீசார் விசாரணை
மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
Published on

சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, மற்றும் போலீசார் சேத்துப்பட்டு அருகே உள்ள ஊத்தூர், தேவிகாபுரம், ஆகிய பகுதிகளில் மணல் கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஊத்தூர் அருகே அதிவேகமாக வந்த டிராக்டரை மறித்தனர். அப்போது போலீசாரை கண்டவுடன் டிராக்டரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் டிராக்டரை சோதனை செய்தபோது அதில் மணல் கடத்தியது தெரிய வந்தது.

இதையடுத்து மணல் கடத்திய டிராக்டரை பறிமுதல் செய்து. மேலும் தப்பியோடு டிரைவரை சேத்துப்பட்டு போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com