பிளஸ்-2 மாணவி கடத்தல்

ரோந்து பணியின் போது போலீசார் மீட்டனர்பெற்றோரிடம் ஒப்படைப்பு
பிளஸ்-2 மாணவி கடத்தல்
Published on

ஆரணி:

கலசபாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி கடந்த 25-ந் தேதி கடத்தப்பட்டார். இந்த நிலையில் 26-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் ஆரணி- ஆற்காடு நெடுஞ்சாலையில் அப்பந்தாங்கல் கூட் ரோடு அருகே உள்ள சோதனைச்சாவடியில் ஆரணி டவுன் போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந் திரன், ஆரணி தாலுகா போலீஸ்காரர் பாபு ஆகியோர்ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு நடந்து சென்ற பள்ளி மாணவியையும், மற்றவரையும் அழைக்கும் போது அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து மாணவியை போலீசார் மீட்டு விசாரித்தனர்.

அப்போது மாணவி, தன்னை கத்திமுனையில் காரில் கடத்தி வரப்பட்டதாகவும் இரவு முழுவதும் ஒரு இடத்தில் இருந்ததாகவும் அதிகாலையில் வேறு பஸ் ஏறி செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்ததாக கூறினார். இதையடுத்து மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் கடத்தப்பட்ட மாணவியை மீட்டு ஒப்படைத்த ரவிச்சந்திரன், பாபு ஆகியோரை திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com