மண் கடத்திய லாரி பறிமுதல்

வருவாய்த் துறையினர் சோதனையில் சிக்கியது போலீசார் விசாரணை
மண் கடத்திய லாரி பறிமுதல்
Published on

ஆரணி:

ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தின் ஏரியில் லாரி மற்றும் டிராக்டர் மூலம் மொரம்பு மண் கடத்துவதாக சப்-கலெக்டர் தனலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

மேலும் சப் கலெக்டர் மற்றும் வருவாய்த் துறையினர் முள்ளிண்டிரம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு சென்ற போது லாரியில் மொரம்பு மண் அள்ளியவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இதனையொடுத்து சப் கலெக்டர் தனலட்சுமி மொரம்பு மண் கடத்திய லாரியை பறிமுதல் செய்து ஆரணி தாலுகா போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com