search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பளுதூக்குதல் விளையாட்டிற்கான மாணவர்கள் தேர்வு
    X

    பளுதூக்குதல் விளையாட்டிற்கான மாணவர்கள் தேர்வு

    • விண்ணப்பிக்க 8-ந்தேதி கடைசி நாள்
    • போட்டி வருகிற 11-ந் தேதி காலை நடைபெறும்

    திருவண்ணாமலை:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னை கடிதத்தின்படி, வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள பளுதூக்குதல் விளையாட்டிற்கான முதன்மை நிலை மையம் செயல்படுகிறது.

    பள்ளிகளில் 9-ம் மற்றும் 11-ம் வகுப்புகள், கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் முதலாம் ஆண்டு, பன்னாட்டு, தேசிய சீனியர் பிரிவில் பதக்கம் வென்று கல்லூரி படிப்பை முடித்த மாணவ, மாணவியர்கள் தகுதியின் படி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    எனவே வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் தங்கி பயிற்சி பெற விருப்பம் உள்ள மாணவ, மாணவியர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    மேற்படி விண்ணப்பத்தினை இணையதளம் வாயிலாக ஆன்லைனில் பூர்த்தி செய்தல் வேண்டும்.

    விண்ணப்ப படிவத்தினை ஆன்லைனில் பூர்த்தி செய்து, சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 8-ந்தேதி ஆகும். மேலும் 2022-2023 - ஆம் ஆண்டில் வேலூர் சத்துவாச்சாரி தூக்கும் முதன்மை நிலை மையத்திற்கு மாணவ, மாணவியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநில அளவிலான தேர்வுகள் மேற்படி மையத்தில் வருகிற 11-ந் தேதி காலை நடைபெறும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு இளைஞர் நல அலுவலர் திருவண்ணாமலை மாவட்டம் அவர்களை 04175-233169 என்ற தொலைபேசியில் அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம் என்று திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

    Next Story
    ×