search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரணியில் இன்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்
    X

    ஆரணியில் இன்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்

    • போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
    • 1,000 போலீசார் பாதுகாப்பு

    ஆரணி:

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பாக அணிவகுப்பு பேரணி நடத்திட தமிழகம் முழுவதும் நீதிமன்றம் மூலம் தடை செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் ஐகோர்ட்டு மூலம் அனுமதி பெறப்பட்டு (இன்று) தமிழகம் முழுவதும் உரிய பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அணி வகுப்பு பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணி அளவில் ஆரணி கொசப்பாளையம் தர்மராஜா கோவில் மைதா னத்தில் இருந்து சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 300 பேர் பேண்ட் வாத்தியங்களுடன் நகரின் முக்கிய வீதிகள் வழி யாக கொசப்பாளையம் சுந்தரம் தெரு, நேஷனல் டாக்கீஸ் சாலை, தச்சூர் சாலை, காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு வழியாக ஆரணிப்பாளையம் பகுதியில் உள்ள என்.மகாலில் நிறைவு செய்து அங்கு ஆலோசனை கூட்டம் நடை பெறுகிறது.

    இந்த நிலையில் பேரணி செல்லும் பாதைகளை திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் நேற்று போலீசாருடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது காந்தி ரோட்டில் போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் தடுப்பு வேலிகள் எங்கு அமைக்கப்பட வேண்டும், கயிறுகள் எங்கு போலீசார் அமைத்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆரணி துணை போலீஸ் சூப் பிரண்டு ரவிச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ் பெக்டர் சுந்தரேசன் ஆகியோரிடம் அறிவுறுத்தினார். சுமார் 400-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×