search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார்த்திகை தீபத்தன்று பருவதமலைக்கு வருகை தரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு
    X

    கார்த்திகை தீபத்தன்று பருவதமலைக்கு வருகை தரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு

    • ஆதார் கார்டு கட்டாயம்
    • முன்ேனற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம், கடலாடி ஊராட்சிகளுக்கு இடையில் தென்கைலாயம் என்று அழைக்கப்படும் சுமார் 4 ஆயிரத்து 560 அடி உயரம் கொண்ட பருவதமலை அமைந்துள்ளது.

    இந்த மலையின் உச்சியில் உள்ள கோவிலில் மல்லிகாஜுனேஸ்வரர் அன்னை பிரம்மராம்பிகை அம்பாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிகிறார்கள்.

    மலைக்கு செல்ல 700 அடிக்கு செங்குத்தான படிகளை கடந்து செல்ல வேண்டும். மூலிகைச் செடி, கொடி, மரங்கள் உள்ளடக்கிய சிறப்பு வாய்ந்த பருவத மலைக்கு ஒவ்வொரு பவுர்ணமி மற்றும் அமாவாசை, வார விடுமுறை நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கு சென்று பக்தர்களே சாமிக்கு அபிஷேகம் தீபாரதனை செய்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    வரும் டிசம்பர் 6 தேதி அன்று கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு பருவதமலை உச்சியில் கொப்பரை வைத்து தீபம் ஏற்றப்படுகிறது. விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளனர். இதனால் மலையின் மீது ஏறி சென்று பக்தர்கள் இடையூறு இன்றி சாமி தரிசனம் செய்வதற்காக முன்ேனற்பாடு பணிகள் குறித்து கலசப்பாக்கம் தாலுகா அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கலசப்பாக்கம் தி.சரவணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இந்து சமய உதவி ஆணையர் ஜோதிலட்சுமி முன்னிைல வகித்தார். ஆலோசனைக் கூட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழா அன்று பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரஉள்ளதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கூடுதல் போக்குவரத்து வசதி, மலையேறும் வழியில் மின்விளக்கு வசதிகள் மற்றும் மலை அடிவாரத்தில் மருத்துவ வசதி செய்வது மற்றும் மலை மீது ஏறி செல்ல பக்தர்களிடையே கட்டுப்பாடுகள் விதித்து எவ்வளவு பக்தர்கள் செல்ல வேண்டும் என முன்னதாக வரையறுக்கப்பட்டு மலை மீது செல்பவர்களுக்கு கட்டாயம் ஆதார் கார்டு நகல் மற்றும் மொபைல் எண் பெற்றுக் கொண்டு அனுமதிக்க வேண்டும்.

    மேலும் மலை உச்சியில் நீண்ட நேரம் பக்தர்களை ஓய்வெடுக்க அனுமதிக்க கூடாது எனவும் வழியில் அதற்கான ஏற்பாடுகளை செய்யப்பட வேண்டும் உட்பட பல்வேறு கருத்துகள் பற்றி கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.

    கூட்டத்தில் கலசப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி ராமஜெயம், அறங்காவலர் குழு தலைவர் ராமன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவகுமார், ஒன்றிய கவுன்சிலர் கலையரசிதுரை, ஊராட்சி மன்ற தலைவர் எழில்மாறன் மற்றும் அரசு அலுவலர்கள் இந்து சமய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×