சிவன் கோவிலில் பிரதோஷ விழா

சிறப்பு அபிஷேகம் நடந்தது ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சிவன் கோவிலில் பிரதோஷ விழா
Published on

செங்கம்:

செங்கத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஅனு பாம்பிகை சமேத ஸ்ரீரிஷபேஷ்வரர் திருக்கோவிலில் பங்குனி மாத பிரதோஷம் நடைபெற்றது.

இந்த நிகழ்வினை முன்னிட்டு திருக்கோவில் வளாகத்தில் உள்ள நந்திபகவானுக்கு இளநீர், பால், தேன் உள்பட மூலிகை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரித்து மகாதீபா ராதனை நடைபெற்றது.

முன்னதாக கோவிலில் உள்ள மூலவர்களான ரிஷபேஷ்வரர், அனுபாம்பிகை, வள்ளி தெய்வானை சமேத முருக ப்பெருமான், நவகிரகங்கள் சன்னதிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் செங்கம் சுற்றுவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com