search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    16 வயது பெண்ணை கர்ப்பமாக்கிய மேஸ்திரி
    X

    16 வயது பெண்ணை கர்ப்பமாக்கிய மேஸ்திரி

    • போக்சோவில் கைது
    • போலீசார் விசாரணை

    போளூர்:

    கலசபாக்கம் தொப்பானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அன் பரசன் (வயது 29), கட்டிட மேஸ்திரி. இவர் அதே ஊரை சேர்ந்த 16 வயது பெண்ணை காதலித்து வந்தார்.

    மேலும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கிடாம்பாளையம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலுக்கு வெளியே யாருக்கும்.

    தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களை இருவீட்டாரும் சேர்க்கவில்லை. இதனால் அன்பரசன் இளம்பெண்ணுடன் உறவினர் வீட்டில் தங்கினார்.

    இந்த நிலையில் இளம்பெண் உடல்நிலை சரியில்லை என்று தனது தாயாருக்கு தெரிவித்தார். அவர் வந்து ஆதமங்கலம் புதூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றார்.

    அவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோ தனை செய்ததில் இளம்பெண் 7 மாதம் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் உள்நோயாளியாக சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றனர். இதையடுத்து இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய அன்பரசனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×