search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துரியோதனன் படுகளம்
    X

    கோப்புபடம்

    துரியோதனன் படுகளம்

    • காளசமுத்திரம் கோவிலில் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள காளசமுத்திரம் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவிலில் கடந்த மாதம் 25-ந்தேதி அம்மனுக்கு அலகு நிறுத்தி மகாபாரத விழா தொடங்கியது.

    அதைத் தொடர்ந்து மகாபாரத சொற்பொழிவும், வருகிற 14-ந்தேதி முதல் தினமும் இரவில் மகாபாரத நாடகமும் நடைபெற உள்ளது.

    6-ந்தேதி இரவு 7 மணி அளவில் திரவுபதியம்மன் திருக்கல்யாணம், 24-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியுடன், மாலை 6 மணி அளவில் தீமிதி விழா நடக்கிறது. அன்று மாலை பட்டிமன்றம் நடக்கிறது.

    மறுநாள் திங்கள்கிழமை தர்மர் பட்டாபிஷேகம், மாலை இன்னிசை பாட்டுக்கச்சேரியும் நடக்கிறது. 24.6.22 முதல் வருகிற 25.7.22 வரை 32 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×