search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா
    X

    திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா

    • வருகிற 23-ந் தேதி நடக்கிறது
    • வசந்த விழாசிறப்பு பூஜையுடன் தொடங்கியது

    கண்ணமங்கலம்:

    வேலூர் மாவட்டத்தில் உள்ள கம்மவான்பேட்டை கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் அக்னி வசந்த விழா நேற்று சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.

    இதைமுன்னிட்டு கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து அலகு நிறுத்தி தினமும் மகாபாரத சொற்பொழிவு நடக்கிறது.

    14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)திரவுபதியம்மனுக்கு திருக்கல்யாணமும், 23- ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை துரியோதனன் படுகளமும், மாலை தீ மிதி விழாவும் நடக்கிறது.

    24-ந்தேதி தருமர் பட்டாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×